என்ன இனமடா இது!

உஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா என்று விழுந்துபடுத்து விட்டத்தைப்பார்த்தேன்.
விடிந்தது முதல் இருளும் வரை விடாமல் துரத்தும்
ரீவி குரல்களின் ரீங்காரம்
இன்னமும் காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தது.

சிரியா.....
கெமிக்கல் வெப்பன்.....
அமெரிக்கா.....
யுனைட்டட் நேஷன்ஸ்.....

சிரியா, பொதுமக்கள் மீது இரசாயன ஆயுதங்கள் பாவிப்பு.
அதனால் அமெரிக்கா கடுப்பு.
போருக்கு அறைகூவல் விடுப்பு.

அலறிக்கொண்டிருக்கிறார் அமெரிக்க டி.ஆர்.

"அமெரிக்கா உனக்கெல்லாம் அப்பன்டா.....
அடிக்காத கெமிக்கல் வெப்பன்டா....."

இரசாயன ஆயுத பாவனை
இலங்கையிலும் தானே நடந்தது?

சிரியாவில் சிந்துகின்ற இரத்தம்
தமிழன் சிந்தியபோது ஏன் தக்காளிச்சட்னி ஆனது?

இப்போது மொக்கை போடும் அமெரிக்கா
அப்போது முக்காடு போட்டது ஏன்?

சிரியா இரசாயன ஆயுதம் பாவித்ததை உறுதிப்படுத்த உயிரை பணயம் வைத்து வெறியோடு அலைகிறது ஐ நா.

சிரியாவில் இவர்களுக்கு தெரிவது
இதயமும் குருதியும்.
ஈழத்தில் இவர்கள் கண்டது வெறும்
இடியப்பமும் சொதியும்.

பான் கீ மூனுக்குள் இருந்த பவர் ஸ்டாரை
பயன்படுத்திக்கொண்டது இலங்கை.

ஏண்டா இப்படி?

டீக்கடையில் திட்டிக்கொண்டிருந்த வடிவேலுவின் வசனம்.

"பாலெண்டா பொங்கும். பச்சத்தண்ணி எப்பிடி பொங்கும்?"

தமிழனிடம் இருந்தது வெறும் பச்சைத்தண்ணீர்.
சிரியாவில் இருப்பது பாலும் அல்ல... எண்ணெய்!

அமெரிக்காவும் ஐநாவும் பொங்குவதென்ன, பற்றியே எரியும்!

அடுத்தவன் மேல் ஆதங்கப்பட்டு என்ன பலன்?

நம்மள நாமளே திட்டிப்போட்டு திரும்பிப்படுப்பம்.

ஒற்றுமையும் கிடையாது,
ஒயிலும் கிடையாது.
என்ன இனமடா இது!