சபாஷ் சர்தாஜி

ஒரு சர்தாஜி நிலைக் கண்ணாடி முன்னால் கண்களை இறுக மூடிக் கொண்டு நின்றார். அங்கு வந்த அவர் மனைவி கேட்டார் என்ன செய்கிறீர்கள்? அதற்கு சர்தாஜி சொன்னார், நான் தூங்கும்போது எப்படியிருப்பேன் என பார்க்கிறேன்!

ஒரு சர்தாஜி மிகவும் மெதுவாக நிறுத்தி நிறுத்தி எழுதிக்கொண்டிருந்தார். அவரது நண்பர் கேட்டார் ஏன் மிக மெதுவாக எழுதுகிறீர்கள். அதற்கு சர்தாஜி சொன்னார் நான் எனது ஆறு வயது மகனுக்கு எழுதுகின்றேன். அவனால்வேகமாக வாசிக்க முடியாது என்றார்!

ஒரு சர்தாஜி அவசரமாக வேலைக்கு இறங்கும்போது அவர் கைக்குட்டை, குளிர்கண்ணாடியை மேசையில் விட்டு விட்டு இறங்கி விட்டார். அவரது மனைவி பல்கனியில் நின்று இதைச் சொன்னபோது கண்ணாடியை கீழே போடுமாறு கூறினார்.மனைவியும் அதைக் கீழே போட, அது கைதவறி கீழே விழுந்து உடைந்தது. அவசர அவசரமாக மனைவியிடம் சர்தாஜி சொன்னார் கைக் குட்டையை கீழே போடாதே நான் மேலே வருகிறேன்!

ஒரு திரையரங்குக்கு போன சர்தாஜி மீண்டும் மீண்டும் வந்து ரிக்கற் வாங்கினார். ஆச்சரியப்பட்ட ரிக்கற் வழங்குனர் கேட்டார் ஏன் இப்படி என்று. அதற்கு சர்தாஜி சொன்னார் யாரோ ஒரு முட்டாள் கதவருகில் நின்று என் ரிக்கற்றுகளை வாங்கி கிழித்துவிடுகிறான் அதனால்தான்!

ஒரு சர்தாஜி நண்பரிடம் சொன்னார் என் மனைவி வேறு ஒருவருடன் திரைப்படம் ஒண்ணுக்குப் போவதைக் கண்டேன் என்றார். நண்பர் கேட்டார் நீ பின்தொடர்ந்து போனாயா அதற்கு சர்தாஜி சொன்னார். இல்லை அந்த படத்தை நான் முன்னரே பார்த்துவிட்டேன்!