கொட்டுகின்றாய் பனியாக - கண்ணை
வெட்டுகின்றாய் வெயிலாக.
தொட்டுச்செல்லும் காத்தப்போல
முட்டுகின்றாய் இதமாக.
கட்டாந்தரை மேல் விழுந்த
கண்ணாடி நான் ஆனேன்.
கள்ளுக்கடை செல்லாமலே
கவிஞனாகி போனேன்.
பாலைமர கிளையை போல
பலமான மனது - அதை
பப்பாளி ஆக்கிவிட்ட
பார்வை உனது.
பாக்குமர உடம்புக்காரி
பலாப்பழ மனசை தாடி.
கேட்கிறேன் உன்னைத்தாண்டி
நீதான் எனது.
கிட்டிப்புள்ளு ஆடும் நாளில்
சுட்டிப்புள்ள நீ சிரித்துவிட்டாய்.
எட்டுவண்ண வானவில்லை
கிட்டக்கண்டு வெலவெலத்து விட்டேன்.
பட்டம்விடும் மாலைநேரம்
பார்வையாலே கொளுத்திவிட்டாய்.
கொட்டமெல்லாம் அடங்கி நானும்
தொட்டால் சிணுங்கி போல ஆனேன்.
பனைமரத்து கிளியே - நீ
பறந்து வாடி வெளியே
பல்லாங்குழி விழியே - இந்த
பரவசம் தாங் கலியே!
நீ.....
பாட்டி சுட்ட முறுக்கு போல
நான்.....
பாணியான சீனி போல
வா.....
நீயும் நானும் ஒண்ணா சேரலாம்.
நாவல்மர நிழலின் கீழே
நானும் நீயும் சந்திக்கலாமா?
நாலு கதை பேசிவிட்டு
நம்மை பற்றி சிந்திக்கலாமா?
கந்தையாண்ண காணிக்கு போய்
கள்ள மாங்காய் பறிச்சு வாரேன்.
கல்லு உப்பும் தூளும் தொட்டு
காக்காய் கடி கடிக்கலாமா?
கெண்டைக்கால தூக்கி - நீ
கெந்திக்கோடு தாண்ட
மந்தி வால போல - என்
மனசு எங்கோ நீள...
நீ.....
காளிகோயில் அன்னதானம்.
நான்.....
வாழையிலை நீயும் நானும்
வா.....
சேர்ந்துவிட்டால் மேளதாளம் தான்!
வெட்டுகின்றாய் வெயிலாக.
தொட்டுச்செல்லும் காத்தப்போல
முட்டுகின்றாய் இதமாக.
கட்டாந்தரை மேல் விழுந்த
கண்ணாடி நான் ஆனேன்.
கள்ளுக்கடை செல்லாமலே
கவிஞனாகி போனேன்.
பாலைமர கிளையை போல
பலமான மனது - அதை
பப்பாளி ஆக்கிவிட்ட
பார்வை உனது.
பாக்குமர உடம்புக்காரி
பலாப்பழ மனசை தாடி.
கேட்கிறேன் உன்னைத்தாண்டி
நீதான் எனது.
கிட்டிப்புள்ளு ஆடும் நாளில்
சுட்டிப்புள்ள நீ சிரித்துவிட்டாய்.
எட்டுவண்ண வானவில்லை
கிட்டக்கண்டு வெலவெலத்து விட்டேன்.
பட்டம்விடும் மாலைநேரம்
பார்வையாலே கொளுத்திவிட்டாய்.
கொட்டமெல்லாம் அடங்கி நானும்
தொட்டால் சிணுங்கி போல ஆனேன்.
பனைமரத்து கிளியே - நீ
பறந்து வாடி வெளியே
பல்லாங்குழி விழியே - இந்த
பரவசம் தாங் கலியே!
நீ.....
பாட்டி சுட்ட முறுக்கு போல
நான்.....
பாணியான சீனி போல
வா.....
நீயும் நானும் ஒண்ணா சேரலாம்.
நாவல்மர நிழலின் கீழே
நானும் நீயும் சந்திக்கலாமா?
நாலு கதை பேசிவிட்டு
நம்மை பற்றி சிந்திக்கலாமா?
கந்தையாண்ண காணிக்கு போய்
கள்ள மாங்காய் பறிச்சு வாரேன்.
கல்லு உப்பும் தூளும் தொட்டு
காக்காய் கடி கடிக்கலாமா?
கெண்டைக்கால தூக்கி - நீ
கெந்திக்கோடு தாண்ட
மந்தி வால போல - என்
மனசு எங்கோ நீள...
நீ.....
காளிகோயில் அன்னதானம்.
நான்.....
வாழையிலை நீயும் நானும்
வா.....
சேர்ந்துவிட்டால் மேளதாளம் தான்!