ஏ.ஆர்.ரஹ்மான் என்றொரு இசைத்தமிழன்

இரண்டு ஆஸ்கர் விருதுகள், மூன்று கோல்டன் குளோப் விருதுகள், பிராமி விருது, நான்கு தேசிய விருதுகள், ஆறு தமிழ்நாடு அரசு விருதுகள், பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகள் என தொடர்கிறது ரஹ்மானின் விருதுப்பட்டியல்.

ஒன்றையும் கவனிக்காமல் வேலையிலேயே எந்நேரமும் இருப்பதுபோல் தோன்றினாலும், மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களையும் தவறாமல் கேட்டுவிடுவார். அவர்களை சந்திக்கும்போது மனதார பாராட்டுவார்.

ஐந்து வேளையும் தவறாமல் தொழுதுவிடுவார். வாசிக்கும் அநேகமான புத்தகங்கள் மத நல்லிணக்கம் சம்பந்தப்பட்டவையாக இருக்கும்.

ரஹ்மானுக்கு பிடித்த இசைக்கருவிகள் பியானோ, கீபோர்ட், கிடார்.

இசை தவிர்ந்த நேரங்களை தனது குழந்தைகளுடனேயே கழிப்பார். இதுதவிர, உலகத்திரைப்படங்கள் பார்ப்பதும், வீடியோ கேம்ஸ் விளையாடுவதும் ரஹ்மானின் பிரதான பொழுதுபோக்குகள்.

எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோரின் திரைப்பட பாடல்களை கேட்பது மிகவும் பிடிக்கும்.

உணவின் மீது ஆர்வம் கிடையாது. அதேவேளை கட்டுப்பாடும் கிடையாது. கொடுத்ததை சாப்பிடுவார்.

முன்பெல்லாம் இரவிரவாக விழித்திருந்துதான் அவரின் இசையமைப்பு பணிகளை மேற்கொள்வார். இப்போது அப்படியில்லை. பத்து மணிக்கெல்லாம் வீட்டில் குழந்தைகளுடன் இருப்பார்.

ரஹ்மானுக்கு மிகவும் பிடித்த கார் பி.எம்.டபிள்யூ.

உடைகள் மீது ஆர்வமுள்ளவர். ரஹ்மானின் உடைகளை வடிவமைப்பது அவரது மனைவி சாய்ரா ரஹ்மான்.

எப்பொழுது வேண்டுமானாலும் ரஹ்மானை சந்திக்கும் உரிமை பெற்ற ஒரே நபர் இயக்குனர் மணிரத்னம்.

உலகத்தரத்து இசை என்ற பெயரில் மேலைத்தேய இசையை திணிப்பதில்லை ஏ.ஆர்.ரஹ்மான். தமிழில் பல பாரம்பரிய இசை வடிவங்களுக்கு அவர் பாடலில் முக்கியத்துவம் எப்போதும் இருக்கும்.

கடல் திரைப்படத்தில் 'நெஞ்சுக்குள்ளே உம்ம முடிஞ்சிருக்கேன்...' பாடலை தமிழின் பாரம்பரிய இசை வடிவமான தெம்மாங்கை கொண்டு உருவாக்கினார்.

அதே திரைப்படத்தில் ' அடியே...' பாடலில் ரஹ்மான் பயன்படுத்தியது அழிந்துகொண்டிருக்கின்ற, பல இசையமைப்பாளர்கள் தொடவே தயங்குகின்ற தமிழர்களின் இன்னொரு பாரம்பரிய இசை வடிவமான ஒப்பாரி!

தொகுப்பு - ரிஷிஷ்காந்

No comments:

Post a Comment