![]() |
ஓவியம் BY ரிஷிஷ்காந் 05/01/2014 |
உலகில் ஒவ்வொருவரும் வாழ்நாளில் சராசரியாக ஆறு வருடங்களை கனவிலேயே கழிக்கின்றோம்!
பெரும்பாலான ஆண்களின் கனவுகளில் வெளிப்புறப்பகுதிகளும் (Outdoor), பெரும்பாலான பெண்களின் கனவுகளில் உட்புறப்பகுதிகளும் (Indoor) தோன்றும். ஆண்களின் கனவுகளில் பெரும்பாலும் ஆண்களும், பெண்களின் கனவுகளில் சரிசமமாக ஆண்களும் பெண்களும் வருகின்றார்கள்.
பிறவியிலேயே பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் கனவுகள் வரும். ஆனால் கனவில் காட்சிகள் இல்லாமல், சத்தங்கள், தொடு உணர்ச்சிகள் மட்டும் இருக்கும்.
தூக்கத்துக்கு முன்னர் ஏதாவதொரு வகையில் விட்டமின் B6 எடுத்துக்கொண்டால் திகில் கனவுகள் வருமாம்!
கோமாவில் இருப்பவர்கள் மற்றும் Short Term Memory Loss உள்ளவர்களுக்கு கனவே வராது. மூளையில் ஏதாவதொரு விடயம் நினைவில் இருந்தால் மட்டுமே கனவு காணமுடியும். அதேவேளை குறட்டை விடும்போதும் கனவு வராது.
உலகில் பன்னிரண்டு சதவீதமானோருக்கு கறுப்புவெள்ளை கனவுகளும், ஏனையோருக்கு வண்ணக்கனவுகளும் வருகின்றன.
நாம் கனவில் செய்பவற்றை நிஜத்திலும் செய்துவிடக்கூடாது என்பதற்காக உடலின் பெரும்பாலான செயற்பாடுகளை நிறுத்திவிடுகிறது மூளை. அதனால்தான் கண்விழித்ததும் சோம்பலாக உணர்கிறோம்.
கனவு முடிந்து ஐந்து நிமிடங்களில் 50 சதவீத கனவுகள் மறந்துவிடும். மொத்தமாக பத்து நிமிடங்களில் 90 சதவீத கனவுகள் மறந்துவிடும்!
கனவில் உங்களை ஒரு உருவம் கொலைவெறியோடு துரத்தினால் அந்த கனவின் பெயர்தான் Nightmare. அதே உருவம் கனவில் உங்களை கொடூரமாக போட்டுத்தள்ளினால் அக்கனவின் பெயர் Night Terror!
தூக்கத்தில் கனவே வரவில்லை என்றால் புரத குறைபாடு அல்லது மனநிலை பாதிப்பு உள்ளது என்று அர்த்தம். வாரத்துக்கு ஒரு தடவைக்கு மேல் நீங்கள் Nightmare கண்டு அலறினாலும் அது மனநல பிரச்சனைதான்.
உங்கள் கனவுகளுக்கும் உங்களின் அறையின் வெப்பநிலைக்கும் தொடர்புண்டு. அதிக குளிர்ச்சியான அறையில் அதிக கெட்ட கனவுகள் வரும்.
தையல் இயந்திரத்தை கண்டுபிடித்த அமெரிக்கரான எலியாஸ் ஹாவேக்கு அதன் ஊசியை வடிவமைப்பது கடினமாக இருந்தது. அந்த நினைப்பிலேயே தூங்கியவர், தையல் இயந்திரத்தை முழுமையாக முடிக்காமைக்கு ஒரு மன்னன் மரண தண்டனை அளித்து ஈட்டியால் இருபுறமும் குத்துவது போல கனவு கண்டு திடுக்கிட்டு விழித்தார். அந்த கனவில் வந்த ஈட்டிதான் தையல் இயந்திரத்தின் ஊசியானது!
கனவுகள் பற்றிய சில உளவியல் உண்மைகள்.
![]() |
ஓவியம் BY ரிஷிஷ்காந் 05/01/2014 |
உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்துகொண்டே இருப்பது போல் கனவு கண்டால் உங்களுக்கு வாழ்க்கைமேல் உள்ள பிடிப்பு குறைகிறது என்று அர்த்தம்.
அடிக்கடி உங்களை கனவில் யாராவது துரத்தினால் உங்களுக்கு அதிக மனக்கவலைகள் உள்ளன.
மேலே பறந்துகொண்டே இருப்பது போல் கனவு கண்டால் நீங்கள் கடினமாக உழைத்து உயரவோ அல்லது பொறுப்புக்களிலிருந்து தப்பிக்கவோ நினைக்கிறீர்கள்.
உங்கள் பொருட்களை தொலைப்பதுபோல் கனவு வந்தால் நீங்கள் ஏதோ பெரிய மாற்றமொன்றை சந்தித்துள்ளீர்கள் என்று பொருள்.
பள்ளி, கல்லூரிகளில் மீண்டும் சேர்வது போலவோ அல்லது பரீட்சை எழுதமுடியாமல் திண்டாடுவது போலவோ கனவு வந்தால் உங்கள்மீதுள்ள தன்னம்பிக்கையை நீங்கள் இழந்துகொண்டிருக்கிறீர்கள்.
தொகுப்பு, ஓவியங்கள் - ரிஷிஷ்காந்
No comments:
Post a Comment