டாக்டர் ஆர். கார்த்திகேயன்
நல்ல விஷயங்களை கேட்டால் படித்தால் கொஞ்ச நேரம்தான் அந்த பாதிப்பு இருக்கிறது. ஒருநாள் நாளையில் இருந்து முழுதாக மாறவேண்டும் என்று தோன்றும். ஆனால் சில நாட்களிலேயே எல்லாம் மறந்துபோய் பழைய நிலைக்கு வந்துவிடுகிறோம். ஏன் இப்படி?
ஒரு கெட்ட செய்தி பதிவதைப்போல நல்ல செய்தி நம்மில் பதிவதில்லையே. இது ஏன்?
மனிதன் பகுத்தறிவு, பேசும் திறன், கற்பனைத்திறன் எல்லாம் இருந்தும் அடிப்படையில் ஒரு மிருகம். எத்தனை நவீன திறன்கள் வந்தாலும் மனிதனின் ஆதார குணங்கள் விலங்கினுடையது. அதனால் பல லட்சம் ஆண்டுகளாக நம் மூளையில் உறைந்து கிடக்கும் சில விடயங்கள் நம்முள் பலமாக பதிந்துள்ளன.
நம் ஆதார உணர்ச்சிகள் பெரும்பாலும் எதிர்மறையானவையே. மிருகத்தின் ஆதி உணர்வு பயம். உணவுக்கு போராடுவது முதல் உயிருக்கு போராடுவது வரை அனைத்திலும் முன்னே நிற்பது பயம்தான். பயத்தின் நெருங்கிய உணர்வு கோபம். அதனால்தான் இவ்வளவு நாகரிகம் வளர்ந்தும் பயமும் கோபமும் நம்முடனேயே தொற்றிக்கொண்டுள்ளன.
இதனால்தான் கேட்ட செய்தியை சந்தேகப்படாமல் நம்புகிறோம். நல்ல செய்தி என்றால் சந்தேகமாக பல கேள்விகள் கேட்கிறோம்.
சாதாரண உணவு தரும் போஷாக்கு உங்கள் குழந்தைகளுக்கு போதாது என விளம்பர டாக்டர்கள் சொன்னால் பதறியவாறு அம்மாக்கள் அந்த டப்பாவை வாங்குவார்கள்.
நல்ல வீட்டுச்சாப்பாடு போதும். எந்த டப்பாவும் வேண்டாம் என்று சொல்லிப்பாருங்கள். நூறு சந்தேகங்கள் கேட்டுவிட்டு..........
பின்னரும் டப்பா வாங்குவார்கள்.
பயம் மிகப்பெரிய கிரியா ஊக்கி. அந்த சக்தியை உணர்ந்துதான் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மேலதிகாரிகள், விளம்பரதாரர்கள், அரசியல்வாதிகள் அனைவரும் தங்கள் காரியங்களை எளிதாக சாதித்துக் கொள்கிறார்கள்.
பயம் பகுப்பாயும் திறனை மழுங்கடித்துவிடும். கட்டடத்தில் வெடிகுண்டு என தொலைபேசி வந்தால் எனக்கு சாட்சி காண்பித்தால்தான் நான் வெளியே வருவேன் என யாராவது லாஜிக் பேசுவார்களா?
அதுபோலதான் கோபமும். எவ்வளவு நாசூக்கான மனிதராக இருந்தாலும் அவர் காலில் யாராவது ஓங்கி மிதித்துவிட்டால் முதலில் வரும் வார்த்தைகள் கண்டிப்பாக நல்ல வார்த்தைகளாக இருக்காது.
கோபமும் சிந்திக்கும் அறிவை முடக்கிவிடும். மனைவியிடம் கோபத்தில் ஒரு தவறான வார்த்தையை சொல்லிவிட்டு "நான் அப்படி நினைச்சு சொல்லலை." என பின்னர் கணவன்மார்கள் கதறுவதெல்லாம் இதனால்தான்!
பத்து எதிர்மறை உணர்ச்சிகளுக்கு ஒரு நேர்மறை உணர்ச்சிதான் உள்ளது என நரம்பு உளவியல் சொல்கிறது. நீங்களே உங்களுக்கு தெரிந்த எந்த மொழியில் வேண்டுமானாலும் சோதித்து பாருங்களேன். எதிர்மறை உணர்ச்சி என்றால் அச்சம், கோபம், பொறாமை, எரிச்சல், குற்ற உணர்வு, தாழ்வு மனப்பான்மை, பதட்டம், விரக்தி என அடுக்கிக்கொண்டே போகலாம். நேர்மறை உணர்ச்சி என்றால் மகிழ்ச்சி, ஆச்சர்யம் என இரண்டு மூன்றுக்கு மேல் இல்லை.
இதனால்தான் நமக்கு அரைமணி நேரத்துக்கு ஒருதடவை பகீர்... பகீர்... என தலைப்புச்செய்திகள் தேவைப்படுகின்றன. சினிமாவில் குற்றங்கள் பிடிக்கின்றன. அமெரிக்க சினிமாக்கள் இல்லாத பூதங்களை எல்லாம் வைத்து படங்களாய் எடுப்பதும் இதனால்தான்.
செய்தித்தாளின் முதல்பக்கத்தில் ஒரு அறிவியல் கண்டுபிடிப்போ அல்லது ஒரு தன்னம்பிக்கை தரும் செய்தியோ என்றும் வராததும் இதனால்தான். நாம் ஒரு கலவர நிலையை எதிர்பார்த்தே வாழும் சமூகக்கூட்டமாக மாறிவருகிறோம்.
இதனால்தான் ஊக்கமது கைவிடேல் என்ற ஔவை மொழி நமக்கு முக்கியமாக தேவைப்படுகிறது.
வெளியிலிருந்து கிடைக்கும் எல்லா எதிர்மறை எண்ணங்களையும் உணர்வுகளையும் சந்தித்து வெற்றிகொள்ள உள்ளே நேர்மறை எண்ணங்களும் உணர்வுகளும் ஊற்றெடுக்க வேண்டும்.
"உனக்கு படிப்பு வராது" என்று சொன்னால் "நான் படித்து சாதிப்பேன்" என்று சொல்ல, "நீ சிகப்பில்லை" என்றால் "என் பலம் நிறத்தில் இல்லை" என்று சொல்ல, "உன்னால் முடியாது" என்று சொன்னால் "என்னால் முடியும்" என்று சொல்ல..... உள்ளே ஒரு உந்துசக்தி இருந்துகொண்டே இருக்கவேண்டும்.
உங்கள் நம்பிக்கைகளை குலைக்கும் செய்திகளை தொடர்ந்து கேட்டும் படித்தும் வந்தால் அதை நம்ப ஆரம்பித்துவிடுவீர்கள். அது உங்கள் வாழ்க்கையை சிறுமைப்படுத்திவிடும். அதனால், உங்களுக்கு உங்கள் மீதும், உங்கள் வாழ்க்கை மீதும், இந்த உலகின்மீதும் நம்பிக்கை தரும் செய்திகளை தொடர்ந்து செல்லுங்கள். அவை உங்களை வலுப்படுத்தும்.
நன்றி - குமுதம்

ஒரு கெட்ட செய்தி பதிவதைப்போல நல்ல செய்தி நம்மில் பதிவதில்லையே. இது ஏன்?
மனிதன் பகுத்தறிவு, பேசும் திறன், கற்பனைத்திறன் எல்லாம் இருந்தும் அடிப்படையில் ஒரு மிருகம். எத்தனை நவீன திறன்கள் வந்தாலும் மனிதனின் ஆதார குணங்கள் விலங்கினுடையது. அதனால் பல லட்சம் ஆண்டுகளாக நம் மூளையில் உறைந்து கிடக்கும் சில விடயங்கள் நம்முள் பலமாக பதிந்துள்ளன.
நம் ஆதார உணர்ச்சிகள் பெரும்பாலும் எதிர்மறையானவையே. மிருகத்தின் ஆதி உணர்வு பயம். உணவுக்கு போராடுவது முதல் உயிருக்கு போராடுவது வரை அனைத்திலும் முன்னே நிற்பது பயம்தான். பயத்தின் நெருங்கிய உணர்வு கோபம். அதனால்தான் இவ்வளவு நாகரிகம் வளர்ந்தும் பயமும் கோபமும் நம்முடனேயே தொற்றிக்கொண்டுள்ளன.
இதனால்தான் கேட்ட செய்தியை சந்தேகப்படாமல் நம்புகிறோம். நல்ல செய்தி என்றால் சந்தேகமாக பல கேள்விகள் கேட்கிறோம்.
சாதாரண உணவு தரும் போஷாக்கு உங்கள் குழந்தைகளுக்கு போதாது என விளம்பர டாக்டர்கள் சொன்னால் பதறியவாறு அம்மாக்கள் அந்த டப்பாவை வாங்குவார்கள்.
நல்ல வீட்டுச்சாப்பாடு போதும். எந்த டப்பாவும் வேண்டாம் என்று சொல்லிப்பாருங்கள். நூறு சந்தேகங்கள் கேட்டுவிட்டு..........
பின்னரும் டப்பா வாங்குவார்கள்.
பயம் மிகப்பெரிய கிரியா ஊக்கி. அந்த சக்தியை உணர்ந்துதான் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மேலதிகாரிகள், விளம்பரதாரர்கள், அரசியல்வாதிகள் அனைவரும் தங்கள் காரியங்களை எளிதாக சாதித்துக் கொள்கிறார்கள்.
பயம் பகுப்பாயும் திறனை மழுங்கடித்துவிடும். கட்டடத்தில் வெடிகுண்டு என தொலைபேசி வந்தால் எனக்கு சாட்சி காண்பித்தால்தான் நான் வெளியே வருவேன் என யாராவது லாஜிக் பேசுவார்களா?
அதுபோலதான் கோபமும். எவ்வளவு நாசூக்கான மனிதராக இருந்தாலும் அவர் காலில் யாராவது ஓங்கி மிதித்துவிட்டால் முதலில் வரும் வார்த்தைகள் கண்டிப்பாக நல்ல வார்த்தைகளாக இருக்காது.

பத்து எதிர்மறை உணர்ச்சிகளுக்கு ஒரு நேர்மறை உணர்ச்சிதான் உள்ளது என நரம்பு உளவியல் சொல்கிறது. நீங்களே உங்களுக்கு தெரிந்த எந்த மொழியில் வேண்டுமானாலும் சோதித்து பாருங்களேன். எதிர்மறை உணர்ச்சி என்றால் அச்சம், கோபம், பொறாமை, எரிச்சல், குற்ற உணர்வு, தாழ்வு மனப்பான்மை, பதட்டம், விரக்தி என அடுக்கிக்கொண்டே போகலாம். நேர்மறை உணர்ச்சி என்றால் மகிழ்ச்சி, ஆச்சர்யம் என இரண்டு மூன்றுக்கு மேல் இல்லை.
இதனால்தான் நமக்கு அரைமணி நேரத்துக்கு ஒருதடவை பகீர்... பகீர்... என தலைப்புச்செய்திகள் தேவைப்படுகின்றன. சினிமாவில் குற்றங்கள் பிடிக்கின்றன. அமெரிக்க சினிமாக்கள் இல்லாத பூதங்களை எல்லாம் வைத்து படங்களாய் எடுப்பதும் இதனால்தான்.
செய்தித்தாளின் முதல்பக்கத்தில் ஒரு அறிவியல் கண்டுபிடிப்போ அல்லது ஒரு தன்னம்பிக்கை தரும் செய்தியோ என்றும் வராததும் இதனால்தான். நாம் ஒரு கலவர நிலையை எதிர்பார்த்தே வாழும் சமூகக்கூட்டமாக மாறிவருகிறோம்.
இதனால்தான் ஊக்கமது கைவிடேல் என்ற ஔவை மொழி நமக்கு முக்கியமாக தேவைப்படுகிறது.
வெளியிலிருந்து கிடைக்கும் எல்லா எதிர்மறை எண்ணங்களையும் உணர்வுகளையும் சந்தித்து வெற்றிகொள்ள உள்ளே நேர்மறை எண்ணங்களும் உணர்வுகளும் ஊற்றெடுக்க வேண்டும்.
"உனக்கு படிப்பு வராது" என்று சொன்னால் "நான் படித்து சாதிப்பேன்" என்று சொல்ல, "நீ சிகப்பில்லை" என்றால் "என் பலம் நிறத்தில் இல்லை" என்று சொல்ல, "உன்னால் முடியாது" என்று சொன்னால் "என்னால் முடியும்" என்று சொல்ல..... உள்ளே ஒரு உந்துசக்தி இருந்துகொண்டே இருக்கவேண்டும்.
உங்கள் நம்பிக்கைகளை குலைக்கும் செய்திகளை தொடர்ந்து கேட்டும் படித்தும் வந்தால் அதை நம்ப ஆரம்பித்துவிடுவீர்கள். அது உங்கள் வாழ்க்கையை சிறுமைப்படுத்திவிடும். அதனால், உங்களுக்கு உங்கள் மீதும், உங்கள் வாழ்க்கை மீதும், இந்த உலகின்மீதும் நம்பிக்கை தரும் செய்திகளை தொடர்ந்து செல்லுங்கள். அவை உங்களை வலுப்படுத்தும்.
நன்றி - குமுதம்
No comments:
Post a Comment