ஊர் கொத்துரொட்டி


உணவுகளின் சுவைகள் ஊருக்கு ஊர் மாறுபட்டிருப்பதை கவனித்திருப்பீர்கள். சில ஊர்களை குறிப்பிடட உணவுக்கு பிரபலமாக இருக்கும். அப்படிப்படட நிறைய ஊர்களும் நிறைய உணவுகளையும் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். அதே போல சில உணவுகள் சில ஊர்களில் தனித்துவமான சுவையுடன் இருக்கும். அப்படிப்படட ஒன்றுதான் இந்த யாழ்ப்பாண கொத்துரொட்டி.

எமது தாயகப்பகுதிகளையும், மக்களையும் பொறுத்தவரையில் கொத்துரொட்டி பிரபலாமா உணவுதான். விதம்விதமான சுவைகளில், விதம்விதமான முறைகளில் இது தயாரிக்கப்படுகிறது. பரலினால் செய்யப்படட அடுப்பில் கல்லை வைத்து ஊர் எல்லைவரை சத்தம் கேட்க கொத்தப்படும் கொத்துரொட்டி மெல்ல மெல்ல வழக்கொழிந்து வருகிறது. கண்ணாடிக்கடைகளில் சத்தமின்றி மெல்ல வறுத்து எடுக்கப்படும் ஒரு சாதாரண உணவாக அது மாற்றப்பட்டு வருகிறது.

சில இடங்களில் கொத்துரொட்டி வேறுவேறு சுவைகளில் தயாரிக்கப்படும். குறிப்பாக திருகோணமலை, மடடக்களப்பு, அம்பாறை போன்ற கிழக்கு மாகாணங்களில் பல்வேறு சுவையுடைய கொத்துரொட்டிகள் தயாரிக்கப்படடன. அந்த சுவைகளும் நன்றாக இருக்கும். இப்போதெல்லாம் அந்த கொத்து பல்வகைமை வெகுவாக குறைந்துவிட்ட்து. திருகோணமலை சரஸ்வதி தியேட்ட்ருக்கு அருகிலுந்த ஒரு கடையில் சாப்பிடட ஒரு கொத்துரொட்டியின் சுவையில் வேறு எங்கேயும் இதுவரையில் நான் கொத்துரொட்டி சாப்பிடததில்லை. பின்னர் ஒருதடவை தேடிச்சென்ற போது அந்த கடையும் கொத்தும் முன்னாள் விடயங்களாகி போயிருந்தமை தெரியவந்தது.

முன்னர் யாழ்ப்பாணத்தில் கொத்துரொட்டி பெரும்பாலும் ஒரே மாதிரியான சுவை, ஒரே மாதிரியான மணத்துடன்தான் இருக்கும். ஆனால் அந்த சுவைக்கும் மனத்துக்கும் ஈடு இணையே இல்லை. சிறுவயதில் அப்பா வாசலில் வரும்போதே கொத்து ரொட்டி வருகிறது என்பதை இலகுவாக மோப்பம் பிடித்துவிடுவோம். கூடுதலாக நல்ல உறைப்புடன் இருக்கும். அந்த பார்சலை பிரிக்க பிரிக்க நாக்கின் சுவை நரம்புகள் எல்லாம் ஜித்து ஜில்லாடி பாட்டு போட்டு ஆடத்தொடங்கும்.

இப்போது நிலைமை வேறாகி விட்ட்து. ஒரு இடத்துக்கு போய், நல்ல கொத்துக்கடை எங்கே இருக்கிறது என்று கேடடால், அவர்கள் காட்டும் வழி எல்லாம் ஏதாவது ஒரு உயிர்ப்பற்ற, கண்ணாடி சுவரிடப்படட கடையில் போய் நிற்கிறது. அங்கே ஸ்மார்ட் போனை பார்த்து பல்லிளித்து கொண்டிருக்கும் ஒருவர் எங்களை கண்டவுடன் முகத்தை கடுகாடு என்று மாற்றி, குறுகுறு என்று பார்க்கிறார். நாமாக என்ன வேணும் என்று கிடக்கிறார் என்பதை புரிந்து கொண்டோ கொத்து தாங்க அண்ணா எண்டு சொன்னால், பில் எழுதிவிட்டு, கடை போனை எடுத்து போனில் எங்கேயோ சொல்கிறார்.( ஹை டெக் கடை வைச்சிருக்காங்களாம்!)

சாதாரண நேரத்தை விட அதிகமான காத்திருப்பின் பின்னர், எந்தவித சத்தம் சந்ததியும் இன்றி, எங்கோ உள்ளேயிருந்து வறுத்த கொத்து ரொட்டி, வெள்ளைநிற பெட்டிகளில் வந்து சேருகிறது. அது வந்து சேரும் போது, ஓடர் அடுத்தவரின் முகம் போலவே எங்கள் முகமும் மாறியிருக்கும். இதெல்லாம் விட காமெடி அந்த கொத்துரொட்டியை சாப்பிட தொடங்கும்போது நடக்கும். ப்ப்ப்பா....!

மக்களின் மகிழ்ச்சியான தருணங்களை சுவைகூட்டிய கொத்துரொட்டி இப்போது சுவைக்கேட்டு மணம் கெட்டு ஏதோ ஒரு பதார்த்தமாக மாறியவிட்டிருக்கிறது. அவசரகதியில் திரியும் மக்களுக்கோ ஏதோ கொத்து ரொட்டி என்று ஒன்றை சப்பிடடாள் போதும் என்று தோன்றுகிறதோ என்னவோ, இந்த பதார்த்தத்தையும் வாங்கித்தள்ளுகிறார்கள். எதை தந்தாலும் சாப்பிடும் இந்த மனநிலை, அதை விற்றாவது காசு பார்க்க நினைக்கும் சில நவநாகரிக உணவு வியாபாரிகளின் கல்லாவை தாராளமாக நிறைக்கிறது. அவர்கள் அடுத்த கண்ணாடிக்கடையையும் திறந்து, உயிர்ப்பற்ற வாழ்க்கைமுறையை வர்றத்து விடுவார்கள். கடைசியில் காணாமல் போனது யாழ்ப்பாணத்தின் தனித்துவ சுவை, மணம், நிறம் கொண்ட கொத்து ரொட்டி தான்.

- இல.கோகர்ணன் - 

No comments:

Post a Comment