வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது.
ஈழத்தின் கிழக்குக்கோடியில் காரைதீவு என்ற சிற்றூரிலே 1892 ஆம் ஆண்டு பிறந்த மயில்வாகனம், தமிழ் கூறும் நல்லுலகத்திற்குப் பொதுவான தமிழறிஞர் விபுலாநந்தராக மாறியமைக்கு அவரது பன்முகப்படுத்தப்பட்ட பணிகள் மட்டுமன்றி அவரது மனுக்குல நேசிப்பும் காரணமாகும். அவர் பல்துறை சார்ந்த பேரறிஞர். ஆசிரியராக, பண்டிதராக, விஞ்ஞானப்பட்டதாரியாக, பாடசாலைகளின் முகாமையாளராக, பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைப் பேராசிரியராக, அறிஞராக, ஆராய்ச்சியாளராக, மொழிபெயர்ப்பாளராக, விளங்கிய விபுலானந்தர், சமூகத்துறவியாக வாழ்ந்து செய்த தொண்டுகளும், தமிழிற்காற்றிய செவைகளும் அவர் புகழை நிலைக்கச்செய்கின்றன.
மட்டக்களப்பு சென்ற் மைக்கேல் உயர்தர ஆங்கில பள்ளியில் படித்தபோது, தனது கணித நுட்பத்தினால் ஆசிரியரையே வியப்படையச்செய்தார் மயில்வாகனம். தனது 16 வது வயதில் கேம்பிரிட்ஜ் சீனியர் பரீட்சையில் முதலாவது வரிசையில் தேர்ச்சி பெற்று, 1911 ஆம் ஆண்டு கொழும்பு சென்று ஆங்கில ஆசிரியர் பயிற்சிக்கழகத்திற் சேர்ந்து ஆசிரியப்பட்டம் பெற்றார். பயிற்சிக்கழகத்தில் இருக்கும் காலையில் உயர்தர தமிழாராய்ச்சியிலும் கருத்துச் செலுத்திய இவர், கொழும்பில் தமிழறிஞர்களிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களை கற்றார். 1916ஆம் ஆண்டு மதுரை தமிழ்ச்சங்க பரீட்சையில் தேர்ச்சி பெற்றார். 1931ஆம் ஆண்டில் தமிழ் நாடு சென்று, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப்பேராசிரியராக மூன்றாண்டுகள் கடமையாற்றினார். பின்னர் ஈழம் திரும்பி, இலங்கை பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப்பேராசிரியராக கடமையேற்றார்.
விபுலாநந்த அடிகளாரின் சமூகப்பணிகள் அளப்பரியவை. அவர் மக்களைத் துறந்து, மக்களை விட்டு விலகி துறவறம் பூணவில்லை. மக்களிடையே துறவியாக வாழ்ந்து சமூகத்தின் துயரங்களிலும், மகிழ்ச்சிகளிலும் பங்கேற்றார். யாழ்ப்பாணம் யோகர் சுவாமிகளின் பழக்கம், துறவுள்ளம் படைத்த மயில்வாகனத்தை விபுலானந்த அடிகளாக்கியது. 1922 இல் சென்னை சிறீ இராமகிருஷ்ண மடத்தைச்சார்ந்து, தீட்சா நாமம் பெற்றதுடன், அங்கு இராமகிருஷ்ண விஜயம் என்ற தமிழ்ச்சஞ்சிகைக்கும், வேதாந்த கேசரி என்ற ஆங்கில சஞ்சிகைக்கும் ஆசிரியராக இருந்து பல அரிய கட்டுரைகளை எழுதினார். அத்தோடு செந்தமிழ் என்னும் பத்திரிகைக்கும் கட்டுரைகள் எழுதி வெளியிட்டார்.
அதன் பின் மீண்டும் ஈழம் திரும்பிய சுவாமி விபுலானந்தர், அந்நியர் ஆதிக்கத்தில், மதம், மொழி, கலாசாரம் ஆகிய தனித்துவ இயல்புகளை இழந்து கொண்டிருந்த தமிழினத்தை தட்டியெழுப்பும் முயற்சியில் ஈடுபட்டார். கல்வி நிறுவனங்கள் பலவற்றை நிறுவினார். மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயம், திருகோணமலை இந்துக்கல்லூரி, மட்டக்களப்பு விவேகானந்தா மகளிர் ஆங்கிலக்கல்லூரி, காரைதீவு சாரதா வித்தியாலயம் என்பன அவரால் நிறுவப்பட்ட பாடசாலைகளாகும். கொழும்பில் தமிழ்ப்பள்ளிக்கூடம் இல்லாத குறையை நீக்க, விவேகானந்த வித்தியாலயத்தை ஆரம்பித்தார்
நாம் மனிதர் என்னும் பெயருக்கு முழுதும் தகுதி பெற வேண்டுமானால், இன்று முதலே சன்மார்க்கத்தை கடைப்பிடிக்க தொடங்க வேண்டும். பிறருக்கு நன்மை செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன், தான் நல்ல நிலையை அடைய விரும்புவதே உண்மையான சன்மார்க்கமாகும் என்பது சுவாமி விபுலானந்தரின் வார்த்தைகள்.விபுலாநந்த அடிகளாரின் சமூகப்பணிகள் அளப்பரியவை. அவர் மக்களைத் துறந்து, மக்களை விட்டு விலகி துறவறம் பூணவில்லை. மக்களிடையே துறவியாக வாழ்ந்து சமூகத்தின் துயரங்களிலும், மகிழ்ச்சிகளிலும் பங்கேற்றார். யாழ்ப்பாணம் யோகர் சுவாமிகளின் பழக்கம், துறவுள்ளம் படைத்த மயில்வாகனத்தை விபுலானந்த அடிகளாக்கியது. 1922 இல் சென்னை சிறீ இராமகிருஷ்ண மடத்தைச்சார்ந்து, தீட்சா நாமம் பெற்றதுடன், அங்கு இராமகிருஷ்ண விஜயம் என்ற தமிழ்ச்சஞ்சிகைக்கும், வேதாந்த கேசரி என்ற ஆங்கில சஞ்சிகைக்கும் ஆசிரியராக இருந்து பல அரிய கட்டுரைகளை எழுதினார். அத்தோடு செந்தமிழ் என்னும் பத்திரிகைக்கும் கட்டுரைகள் எழுதி வெளியிட்டார்.
அதன் பின் மீண்டும் ஈழம் திரும்பிய சுவாமி விபுலானந்தர், அந்நியர் ஆதிக்கத்தில், மதம், மொழி, கலாசாரம் ஆகிய தனித்துவ இயல்புகளை இழந்து கொண்டிருந்த தமிழினத்தை தட்டியெழுப்பும் முயற்சியில் ஈடுபட்டார். கல்வி நிறுவனங்கள் பலவற்றை நிறுவினார். மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயம், திருகோணமலை இந்துக்கல்லூரி, மட்டக்களப்பு விவேகானந்தா மகளிர் ஆங்கிலக்கல்லூரி, காரைதீவு சாரதா வித்தியாலயம் என்பன அவரால் நிறுவப்பட்ட பாடசாலைகளாகும். கொழும்பில் தமிழ்ப்பள்ளிக்கூடம் இல்லாத குறையை நீக்க, விவேகானந்த வித்தியாலயத்தை ஆரம்பித்தார்
ஈழம் ஈன்றெடுத்த அறிஞர்களில் விபுலாநந்தர் முற்றிலும் வேறுபட்டவர். சாதி, மத, மொழி, இன ஏற்றத்தாழ்வுகளுக்கும், ஏழை, பணக்காரன் என்ற வர்க்க வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டவர். வறுமையிலும், சாதியப் பாதிப்பாலும் நலிவுற்ற மக்களிடையே உலாவினார். அவர்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்து ஆறுதல் கூறினார்.
தாய்மொழிக்கல்விக்கும் அறிவியற்கல்விக்கும் வித்திட்டவர்களில் விபுலாநந்தர் முக்கியமானவர். ஆங்கிலமொழிக்கல்வி ஆதிக்கம் பெற்றிருந்த காலத்தில், தமிழ்ப்பேராசிரியராக விளங்கி, அறிவியற்கல்வியை தமிழிலும் போதிக்கவேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். தமிழில், அறிவியற் கலைச்சொல்லாக்க துறையில் ஈடுபாடு கொண்டு உழைத்தார்.
தன்னுடைய இலக்கியங்களின் ஊடாக, பல வ அழகை தத்துவங்களையும் விதைத்தார். வாழ்வில் இன்பமும் துன்பமும் வருவது சகசம். இந்த உண்மையை நங்கு அறியாதோரே இன்பம் வந்தபோது துள்ளிக் குதிப்பர். துன்பம் நேர்ந்தபோது சோர்ந்து அழுவர். இன்ப துன்பங்களாகிய சுழல் காற்றில் மானிடர் அலைகின்றனர். இந்த உண்மையை உணராதோர்க்கு இன்பமும் துன்பமும் மயக்கத்தையே செய்யும் என்பது அவரின் தத்துவங்களில் ஒன்று. விபுலானந்தரின் இலக்கியப் பணி குறித்துப் பேசும் போது, தமிழுக்குப் புதிதாகவும் மகுடமாகவும் அமைவது யாழ் நூலாகும். பழந்தமிழரின் இசை நுட்பங்களை ஆராய்ச்சி முறையாக விபரிக்கும் ஒரு முதல் நூல். பண்டைத் தமிழரின் இசைக்கருவிகளாகிய வில் யாழ், பேரி யாழ், மகர யாழ், செங்கோட்டி யாழ், சகோட யாழ், என்பன பற்றி யாழ் நூல் கூறுகின்றது. விபுலாநத்தாரின் 14 ஆண்டுகள் ஆராய்ச்சியின் பயனாக யாழ் நூல் தமிழுக்கு பொக்கிஷமாகும்.